Posts

Showing posts with the label கட்டுரை

கடவுள் இருப்பாராக...

மரணமும் மரணத்தின் மீதான பயமும் மரணத்தின் பின்னரான நிச்சயமின்மை குறித்த அச்சமும்தான் கடவுளை இன்று வரை காப்பாற்றி கொண்டிருக்கிறது, என நீண்ட காலத்திற்கு முன்பு வரை நம்பியிருந்தேன். ஆனால் அது உண்மையாகத் தெரியவில்லை. மனிதர்கள் மரணத்தை விடவும் வாழ்வைப் பார்த்தே மிகவும் அஞ்சுகிறார்கள். கையறு நிலை தான் கடவுளையும் கோயில்களையும் இன்றுவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு ஒரு கடவுள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறார். காரணம் ஒன்றும் பெரிதாய் இல்லை. எங்களுக்கு ஒரு துன்பம் வரும்போத ு எங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது அதை சொல்வதற்கு இன்னொருவரை தேடுகிறோம். நாங்கள் எங்களது பிரச்சினையை சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அதை தங்களுடைய பிரச்சனைகளுடன் ஒப்பிட்டு இதற்காகவா கவலைப்படுகிறாய் என்று சொல்லாத ஒரு நபரை, இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்று சொல்லாத ஒரு நபரை, உனக்கு வேற வேலை இல்லை என்று சொல்லாத ஒரு நபரை, இது நீயாக தேடி கொண்டது என்று சொல்லாத ஒரு நபரை நாங்கள் எல்லோரும் தேடுகிறோம். குறைந்தபட்சம் நாங்கள் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு நபரை தேடுகிறோம்.  அப்படியான மனிதர்க...

திருடுபோன நிலங்களின் ஆன்மாவைக் உற்றுக் கேட்டல்.

Image
நேற்றுப் பயணத்தில் ஆழியாள் மொழிபெயர்த்திருக்கும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” என்கிற அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகளின் தொகுப்பை வாசித்தேன். பலவிடயங்களைப் பேசு பொருளாக்கக்கூடிய கவிதைகள் நிறைந்த நூல்.

அதீதனை மீள்வரைதல்

Image
ஒன்றுக்கு தொடர்ச்சியாக மரணம் சம்பவித்துக்கொண்டிருந்தால், அது தொடர்ச்சியாக தனக்கு நடக்கும் ஒன்றை மரணமாக வரைவிலக்கணம் செய்துவைத்திருக்கிறது என்று பொருள். அப்படித்தான் தனக்கு அடிக்கடி மரணம் சம்பவிப்பதாத அதீதன் நினைத்துக்கொண்டிருந்தான். அதீதன் என்கிற பிம்பத்தை முற்றிலுமாக கொலை செய்தல் பற்றியும் அவன் சிந்தித்திருந்தான். ஆனால் அதீதனின் மரணத்தையும் அதீதனைக் கொல்லவேண்டிய தேவையையும் பற்றி அவன் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டான். அதீதன் என்பது ஒரு கற்பனை உருவம் என்கிற எண்ணமும் அதை ஆக்கியவர் அதைப் புறக்கணிக்கையில்தான் மரணங்கள் தொடர்ந்து நிகழ்வதாய் அவன் கொண்டிருந்த எண்ணமும் எத்தனை தவறானது. அதீதனுக்கு, அதீதன் என்கிற பெயர் வழங்கப்பட்டிருக்காவிட்டாலும் அவன் அதீதானாய்த்தான் இருந்திருப்பான் என்கிற உண்மை அவனுக்கு தெரிவதற்கு இந்த ஒரு வார வெறுமை அவனுக்கு தேவைப்பட்டிருக்கிறது. வெறுமையும் கண்ணீரும் கேள்விகளும் உறவுகளும் அவனுக்கு அதை சொல்லிக் கொடுத்திருக்கின்றன. அவன் அதீதன் எனப் பெயர் சூட்டப்பட முன்னர் செய்யாத எந்த வேலையை அந்தப் பெயர் சூட்டலின் பின் செய்திருக்கிறான். பெயர் சூட்டப்பட முன்னர் செய்த ...

புத்தகங்களின் எதிரிகள்

Image
இந்த உலகு புத்தகங்களின் எதிரிகளுக்குச் சொந்தமானது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இது பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்டநாள் இருந்தது. இன்று எப்படியும் எழுதியாக வேண்டும் என்று அமர்ந்தே விட்டேன். இந்தப் பதிவை எழுதுவதற்கு இன்றைய நாளைவிட பொருத்தமான நாள் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. யாழ் நூலகம் தீயிடப்பட்ட கருப்பு  தினம். அதனாற்தான் இன்று இதை எழுதியே தீர்வது என்கிற முடிவுடன் எழுதுகிறேன். காலம் தோறும் புத்தகத்தின் எதிரிகள்தான் உலகை ஆண்டிருக்கிறார்கள். அது பற்றிப் பார்க்கும் முன்னர் எனது பார்வையில் புத்தகம் என்றால் என்ன என்பதைச் சொல்லவேண்டி இருக்கிறது. புத்தகம் ஆத்மார்த்தமானது, அது ஒரு அனுபவம் என்கிற அழகியல்வாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் வெளியே நின்று புத்தகங்களை நோக்குபவன் நான் (அதற்காக புத்தகம் குறித்த அழகியல் வாதக் கருத்துக்களை முற்றாக மறுப்பவன் அல்லன். புத்தகம் ஒரு அனுபவமும் தான்).  என்னைப் பொறுத்தவரை புத்தகம் என்பது ஒரு கருவி. ஒரு ஆயுதம். வாய்மொழிக் கதைகளுக்கு அடுத்ததாக மனிதனிடம் இருக்கும் சிறந்த தொடர்பாடல் ஊடகம் அது. புத்தகம் என்பது உலகின் ஒட்டுமொத்த அறி...

ஆரோன் சுவாட்ஸ்: இணையச் சுதந்திரத்தின் குறியீடு

Image
"போராட வீதிக்கு இறங்கும்போதும் போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பும்போதும் யாருடைய கண்களுக்கும் புலப்படாத, யாருடைய காதுகளுக்கும் கேட்காத வலுவற்ற மனிதர்களாக எங்களை நாங்களே எண்ணிக்கொள்வது மிகவும் எளிதானது. ஆனால் நான் இன்று சொல்கிறேன் நீங்கள் மிகவும் பலமானவர்கள். வீதிக்கு இறங்கினால் உங்களால் இந்தச் சட்டத்தை தடுக்க முடியும்" இணையத்தில் இடம்பெறுகின்ற காப்புரிமை மீறல்களை கட்டுப்படுத்தல் எனும் பெயரில் அமெரிக்க அரசாங்கம் கொண்டுவரவிருந்த 'இணையவழித் திருட்டை தடுக்கும் சட்டம்' என்கின்ற SOPA சட்டத்தை எதிர்த்துப் போராட மக்களை அழைக்கும் போது ஆரோன் சுவாட்ஸ் கூறிய வசனங்கள் இவை. ஆம், ஆரோன் சுவாட்ஸ் இணையத்தின் சொந்தப் பிள்ளை என அழைக்கப்பட்ட ஒரு போராளி. சுதந்திர இணையத்தையும் அறிவு என்னும் பொதுச் சொத்தையும் பாதுகாப்பதற்காக போராடி மடிந்த ஒரு போராளி. இறக்கும்போது ஆரோனுக்கு 26 வயது. அந்த 26 ஆண்டுகால வாழ்நாளில் அரைவாசியை அவன் ஒரு செயற்பாட்டாளனாகக் கழித்திருக்கிறான். 14 வயதில் இருந்தே இணையத்துக்காக பங்களிக்கவும் குரல் எழுப்பவும் தொடங்கினான் ஆரோன் . இணையத்துக்காக எத்தனையோ மென...

மடியில் உறங்கும் பூனை

Image
ஒரு நீண்ட பயணத்தை முடித்து வீடு வந்திருந்தேன். படிப்பதற்காக கொழும்புக்குச் சென்றதிலிருந்து என்னவோ நான் வீட்டுக்கு விருந்தினன் போல மாறிப் போய்விட்டேன். மாதம் ஒருமுறையோ, சிலவேளை இருமாதத்திற்கு ஒருமுறையோதான் வீடு. இந்த ஏழு வருடங்களும் அப்படித்தான் கழிந்திருக்கிறது. இன்றும் அப்படித்தான் வீட்டுக்கு வந்தேன். வீட்டாரின் வழமையான எல்லாவற்றையும் தாண்டி எனது கதிரையில் வந்து அமர்ந்தேன். இந்தக் கதிரை இன்னாருக்கு என வீட்டில் யாருக்கும் பட்டயங்கள் எழுதியிருக்கவில்லை ஆனாலும் நான் வீட்டிலிருக்கும் பொழுதில் அது என்னுடைய கதிரைதான். அதனால்த்தான் வீடு வந்ததும் முன்னுக்கே இருந்த நான்கு கதிரைகள் தாண்டி அந்தக் கதிரையில் வந்து அமர்ந்தேன். அமர்ந்து கொஞ்ச நேரம் ஆகியிருக்கும். எனதருகே வந்தது எங்கள் வீட்டுப் பூனை. நான் எப்போதும் அதை என்னுடைய பூனையாகக் கொண்டாடியதில்லை. அதுவும் தான். பசித்தால் அருகில் வரும் நான் உணவு வைப்பேன். அவ்வளவுதான் எங்கள் உறவு. பூனை எங்கள் வீட்டிற்கு வந்த பன்னிரண்டு வருடங்களில் இது மாறியிருக்கவில்லை. இன்று மாறியது. எனதருகில் வந்து எனது முகத்தை ஒரு கணம் பார்த்தது. நானும் பார்த்தேன். அதன்...