ஆங்கில மூலம்: அமாலி வெதகெதர ( Budget 2025: Adjusting and adapting inside IMF prison ) தமிழில்: அனோஜன் ஸ்ரெலாராணி திருக்கேதீஸ்வரநாதன் கடன்காரர்கள் கட்டிய சிறைக்குள் வாழ்க்கையை நடத்துவதில் கடன்பட்டவர்களுக்கு உள்ள சிரமத்தை சொல்லும் ஒரு கதை போலுள்ளது 2025ம் ஆண்டிற்கான பாதீடு. 2025 இன் அரச செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமுன்வரைவு, சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட நிதிசார் நெருக்குவாரங்களையும் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதில் இருக்கும் இடர்பாடுகளையும் ஒருசேர படம்பிடித்துக் காட்டுகிறது. “பொருளாதார உறுதிப்பாட்டை கட்டிக்காத்தலும் கடன் மீள்செலுத்தலுக்கான நிலைபேற்றுத்தன்மையை மீட்டெடுப்பதும் இலங்கையின் பொருளாதாரத்தைச் செழிப்படையச் செய்ய முக்கியமாகிறது" எனச் சொன்ன சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு அறிக்கையின் வார்த்தை விளையாட்டுக்களில் இருந்த மட்டுப்பாடுகளையும் இந்தப் பாதீடு அம்பலப்படுத்துகிறது. பொருளாதாரத்தின் அடிப்பட்டைக் கட்டுமானங்களை மேம்படுத்தவும், தொழில்துறைகளை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பை சீர்செய்தலையும், திறன்களை வ...
அன்புள்ள அனுர, ஒரு அப்பாவி நிறக்குருடனின் மடல் இது நீங்கள் இப்போது ஒரு புதிய நிறத்தை வரிந்திருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள் எனக்கு முன்னமும் நிறக் குருடு இருந்ததால் உங்கள் பழைய நிறத்தையும் என்னால் பிரித்துப் பார்க்க இயலவில்லை மன்னிக்கவும். இப்போது இந்தக் கடிதத்தை நீங்கள் வரித்திருக்கும் நிறத்தை அறியவேண்டி வரைகிறேன். அன்புள்ள அனுர இப்போதும் நீங்கள் எல்லா இனவாதமும் ஒரேமாதிரியானவை என்றுதானா சொல்கிறீர்கள்? பேரினவாத என்ற சொல்லுக்கு இணையான சிங்களச் சொல்லை நீங்கள் இன்னமும் கண்டடையவில்லையா? எட்டை ஒன்பதாக்கியதை இப்போதும் கூட்டங்களில் பெருமையடிக்கிறீர்களா அனுர? பழைய (போர்க்)குற்றம் பற்றியும் புதிய (போர்த்)தளபதி பற்றியும் எப்போது பேசுவீர்கள் அனுர? சிதறிய தலைகள் அதைப் பார்த்து அழுத கண்கள் காணாமற்போன உறவுகள் அதைப் பார்க்கக் கிடைக்காது அழுத கண்கள் குதறப்பட்ட உடல்கள் அதைப் பார்க்க முடியாது மூடி அழுத கண்கள் எப்போது நீங்கள் பார்ப்பீர்கள் அனுர? எப்போது பேசுவீர்கள்? எப்போது அனுர? தமிழர்களுக்கு தீர்வு எனக் கேட்டால் சுயநிர்ணயம் சுயாட்சி என்ற சொற்கள...
வானம் சிவந்து கிடக்கிறது என நீ சொன்ன கணத்தில் நானும் வானம் பார்த்தேன், அடர் கருநீலத்தில் விரியும் சிறு ஒளியுடன் இருந்தது, நான் பார்த்த வானம். மலைமுகட்டின் உச்சியில் தெரியும் சின்னப் பூவை பார்க்கச் சொன்னேன். பூவை மறைத்து ஒரு இலை இருப்பதாய் சொன்னாய் நீ. வடக்கிலிருந்து காற்று வீச அதை உன் மேற்குக் காற்று என்றாய் நீ. இடையில் மலை இருக்கிறது சொன்னாய் நீ. மலையில் தெறித்து வண்ணம் மாற மலையின் உயரம் பார்வையை மாற்ற மலையில் பட்டு காற்றுத் திரும்ப இடையில் ஒரு மலையிருக்கிறது சொன்னாய் நீ அப்படியே மலையின் பெயரைச் சொல்லிவிடு. அந்த மலையின் பெயர் என்ன?
Comments
Post a Comment