ஆங்கில மூலம்: அமாலி வெதகெதர ( Budget 2025: Adjusting and adapting inside IMF prison ) தமிழில்: அனோஜன் ஸ்ரெலாராணி திருக்கேதீஸ்வரநாதன் கடன்காரர்கள் கட்டிய சிறைக்குள் வாழ்க்கையை நடத்துவதில் கடன்பட்டவர்களுக்கு உள்ள சிரமத்தை சொல்லும் ஒரு கதை போலுள்ளது 2025ம் ஆண்டிற்கான பாதீடு. 2025 இன் அரச செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமுன்வரைவு, சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட நிதிசார் நெருக்குவாரங்களையும் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதில் இருக்கும் இடர்பாடுகளையும் ஒருசேர படம்பிடித்துக் காட்டுகிறது. “பொருளாதார உறுதிப்பாட்டை கட்டிக்காத்தலும் கடன் மீள்செலுத்தலுக்கான நிலைபேற்றுத்தன்மையை மீட்டெடுப்பதும் இலங்கையின் பொருளாதாரத்தைச் செழிப்படையச் செய்ய முக்கியமாகிறது" எனச் சொன்ன சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு அறிக்கையின் வார்த்தை விளையாட்டுக்களில் இருந்த மட்டுப்பாடுகளையும் இந்தப் பாதீடு அம்பலப்படுத்துகிறது. பொருளாதாரத்தின் அடிப்பட்டைக் கட்டுமானங்களை மேம்படுத்தவும், தொழில்துறைகளை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பை சீர்செய்தலையும், திறன்களை வ...
நேற்றுப் பயணத்தில் ஆழியாள் மொழிபெயர்த்திருக்கும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” என்கிற அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகளின் தொகுப்பை வாசித்தேன். பலவிடயங்களைப் பேசு பொருளாக்கக்கூடிய கவிதைகள் நிறைந்த நூல்.
இந்த உலகு புத்தகங்களின் எதிரிகளுக்குச் சொந்தமானது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இது பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்டநாள் இருந்தது. இன்று எப்படியும் எழுதியாக வேண்டும் என்று அமர்ந்தே விட்டேன். இந்தப் பதிவை எழுதுவதற்கு இன்றைய நாளைவிட பொருத்தமான நாள் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. யாழ் நூலகம் தீயிடப்பட்ட கருப்பு தினம். அதனாற்தான் இன்று இதை எழுதியே தீர்வது என்கிற முடிவுடன் எழுதுகிறேன். காலம் தோறும் புத்தகத்தின் எதிரிகள்தான் உலகை ஆண்டிருக்கிறார்கள். அது பற்றிப் பார்க்கும் முன்னர் எனது பார்வையில் புத்தகம் என்றால் என்ன என்பதைச் சொல்லவேண்டி இருக்கிறது. புத்தகம் ஆத்மார்த்தமானது, அது ஒரு அனுபவம் என்கிற அழகியல்வாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் வெளியே நின்று புத்தகங்களை நோக்குபவன் நான் (அதற்காக புத்தகம் குறித்த அழகியல் வாதக் கருத்துக்களை முற்றாக மறுப்பவன் அல்லன். புத்தகம் ஒரு அனுபவமும் தான்). என்னைப் பொறுத்தவரை புத்தகம் என்பது ஒரு கருவி. ஒரு ஆயுதம். வாய்மொழிக் கதைகளுக்கு அடுத்ததாக மனிதனிடம் இருக்கும் சிறந்த தொடர்பாடல் ஊடகம் அது. புத்தகம் என்பது உலகின் ஒட்டுமொத்த அறி...
Comments
Post a Comment