ஆங்கில மூலம்: அமாலி வெதகெதர ( Budget 2025: Adjusting and adapting inside IMF prison ) தமிழில்: அனோஜன் ஸ்ரெலாராணி திருக்கேதீஸ்வரநாதன் கடன்காரர்கள் கட்டிய சிறைக்குள் வாழ்க்கையை நடத்துவதில் கடன்பட்டவர்களுக்கு உள்ள சிரமத்தை சொல்லும் ஒரு கதை போலுள்ளது 2025ம் ஆண்டிற்கான பாதீடு. 2025 இன் அரச செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமுன்வரைவு, சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட நிதிசார் நெருக்குவாரங்களையும் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதில் இருக்கும் இடர்பாடுகளையும் ஒருசேர படம்பிடித்துக் காட்டுகிறது. “பொருளாதார உறுதிப்பாட்டை கட்டிக்காத்தலும் கடன் மீள்செலுத்தலுக்கான நிலைபேற்றுத்தன்மையை மீட்டெடுப்பதும் இலங்கையின் பொருளாதாரத்தைச் செழிப்படையச் செய்ய முக்கியமாகிறது" எனச் சொன்ன சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு அறிக்கையின் வார்த்தை விளையாட்டுக்களில் இருந்த மட்டுப்பாடுகளையும் இந்தப் பாதீடு அம்பலப்படுத்துகிறது. பொருளாதாரத்தின் அடிப்பட்டைக் கட்டுமானங்களை மேம்படுத்தவும், தொழில்துறைகளை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பை சீர்செய்தலையும், திறன்களை வ...
"இந்தக் கதய இதோட நிப்பாட்டினா எல்லாருக்கும் நல்லம். தாரதத் தீண்டுபோட்டு ஒரு மூலையில் கிடக்கவேணும். எனக்கு யாரும் படிப்பிக்க வெளிக்கிட வேணாம்" பாக்கியத்தின் முகத்தில் அடித்தபடி சொல்லிவிட்டு மோட்டார் வண்டியை உதைக்கத் தொடங்கினார் ராஜேந்திரன். வண்டியை இயக்க அவர் உதைத்த ஒவ்வொரு உதையையும் கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் முந்தய கணத்தில் மகனிடம் வாங்கிய பேச்சிலிருந்து இன்னமும் வெளிவரமுடியாமல் இருக்கும் தாய். சொற்கள் விழுந்த வேகமும் இப்போது உதை விழுகிற வேகமும் தங்களுக்குள் ஒரு போட்டியை நடாத்த முடிவெடுத்தால் காலின் விசை இயந்திரத்தை போய்ச் சேர முன்னர் பாக்கியத்தின் இதயத்தில் மகன் சொன்ன சொற்கள் குறைந்தது ஆயிரம் ஈட்டிகளையாவது இறக்கியிருக்கும். தன் மகனிடமிருந்து அவரை நோக்கி இத்தனை வெம்மையான சூடு சொற்கள் வந்தது இதுவே முதல் முறை. "அலாட்டாமல் கிடவுங்கோவன்", "வயசுபோன காலத்தில சும்மா கிடந்தால் நல்லம்" என்று ராஜேந்திரனின் வாயில் இருந்து அடிக்கடி உதிரும் சொற்கள் சுடுவதைவிட இந்தச் சொற்கள் பாக்கியத்தை அதிகம் சுட்டுவிட்டன. பாக்கியத்தின் இமைகள் இன்னமும் வ...
அன்புள்ள அனுர, ஒரு அப்பாவி நிறக்குருடனின் மடல் இது நீங்கள் இப்போது ஒரு புதிய நிறத்தை வரிந்திருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள் எனக்கு முன்னமும் நிறக் குருடு இருந்ததால் உங்கள் பழைய நிறத்தையும் என்னால் பிரித்துப் பார்க்க இயலவில்லை மன்னிக்கவும். இப்போது இந்தக் கடிதத்தை நீங்கள் வரித்திருக்கும் நிறத்தை அறியவேண்டி வரைகிறேன். அன்புள்ள அனுர இப்போதும் நீங்கள் எல்லா இனவாதமும் ஒரேமாதிரியானவை என்றுதானா சொல்கிறீர்கள்? பேரினவாத என்ற சொல்லுக்கு இணையான சிங்களச் சொல்லை நீங்கள் இன்னமும் கண்டடையவில்லையா? எட்டை ஒன்பதாக்கியதை இப்போதும் கூட்டங்களில் பெருமையடிக்கிறீர்களா அனுர? பழைய (போர்க்)குற்றம் பற்றியும் புதிய (போர்த்)தளபதி பற்றியும் எப்போது பேசுவீர்கள் அனுர? சிதறிய தலைகள் அதைப் பார்த்து அழுத கண்கள் காணாமற்போன உறவுகள் அதைப் பார்க்கக் கிடைக்காது அழுத கண்கள் குதறப்பட்ட உடல்கள் அதைப் பார்க்க முடியாது மூடி அழுத கண்கள் எப்போது நீங்கள் பார்ப்பீர்கள் அனுர? எப்போது பேசுவீர்கள்? எப்போது அனுர? தமிழர்களுக்கு தீர்வு எனக் கேட்டால் சுயநிர்ணயம் சுயாட்சி என்ற சொற்கள...
Comments
Post a Comment