Popular posts from this blog
புத்தகங்களின் எதிரிகள்
இந்த உலகு புத்தகங்களின் எதிரிகளுக்குச் சொந்தமானது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இது பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்டநாள் இருந்தது. இன்று எப்படியும் எழுதியாக வேண்டும் என்று அமர்ந்தே விட்டேன். இந்தப் பதிவை எழுதுவதற்கு இன்றைய நாளைவிட பொருத்தமான நாள் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. யாழ் நூலகம் தீயிடப்பட்ட கருப்பு தினம். அதனாற்தான் இன்று இதை எழுதியே தீர்வது என்கிற முடிவுடன் எழுதுகிறேன். காலம் தோறும் புத்தகத்தின் எதிரிகள்தான் உலகை ஆண்டிருக்கிறார்கள். அது பற்றிப் பார்க்கும் முன்னர் எனது பார்வையில் புத்தகம் என்றால் என்ன என்பதைச் சொல்லவேண்டி இருக்கிறது. புத்தகம் ஆத்மார்த்தமானது, அது ஒரு அனுபவம் என்கிற அழகியல்வாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் வெளியே நின்று புத்தகங்களை நோக்குபவன் நான் (அதற்காக புத்தகம் குறித்த அழகியல் வாதக் கருத்துக்களை முற்றாக மறுப்பவன் அல்லன். புத்தகம் ஒரு அனுபவமும் தான்). என்னைப் பொறுத்தவரை புத்தகம் என்பது ஒரு கருவி. ஒரு ஆயுதம். வாய்மொழிக் கதைகளுக்கு அடுத்ததாக மனிதனிடம் இருக்கும் சிறந்த தொடர்பாடல் ஊடகம் அது. புத்தகம் என்பது உலகின் ஒட்டுமொத்த அறி...
பொய்கள் உதிர்க்கும் புத்தன்
எனக்குப் பிடிக்காதவொரு புத்தனை எனது மேசையில் வைத்திருக்கிறேன். இரண்டங்குல உயரம் பழுப்பு வண்ண உடலை உலோக வண்ணத் துணியால் போர்த்திய ஒரு சிறிய புத்தன். அமர்ந்தபடி அமைதிசூழந்த கண்களின் கீழே புன்னகை பூக்கும் உதடுகளால் கதை பேசும் எனக்குப் பிடிக்காத என் மேசைப் புத்தன் கதை பேசும் உதடுகளால் தினமும் பொய் பேசுகிறான் என்னிடம். அமைதி தொலைந்து மேசைமுன் அமரும் என்னிடம் அவன் சொல்லும் அந்தப் பொய்கள் கொடுமையானவை. "பற்றற்றிரு... அமைதி காண்பாய்" "அமைதியை உள்ளே தேடு..." "கர்மா... நீதான் காரணம்..." புன்னகையுடன் இத்தனை வலிமிகு சொற்களைச் சொல்ல அவனால் எப்படி முடிகிறதோ உலகென்றொன்று இருப்பதையும் ஒடுக்குமுறைகள் நடப்பதையும் ஒரு சொல்லாலும் சுட்டாது என்னை பற்றறிருக்க சொல்லுகிறான் கண்களை என்றைக்கும் திறந்திராத என்னை என்றுமே கண்டிராத என் மேசைப் புத்தன். நல்லவேளை அவன் வெறும் புத்தனாய்ப் போனான். பொய்களை உதறி என்னால் என்னால் நடக்க முடிகிறது. என் மேசைப் புத்தன் புத்தபெருமானாய் போயிருந்தால்...
Comments
Post a Comment