அந்தரத்தில் இருப்பவர்கள்.
29-10-2012 ல் பாடிப்பறைக் கவியரங்கத்தில் வாசித்த கவிதை. சமர்ப்பணம் மதத்தின் பெயரால் கொல்லப்பட்ட புத்தனுக்கும் இயேசுவுக்கும் சமர்பணம். *** " உடல்முழுதும் வியர்வையெனக் குருதி வழிய தினம் தினம் அல்லலுற்று , அவதிப்பட்டு கணப்பொழுதும் நிம்மதியின்றி அலைபவர்களே ! முந்தைப் பிறப்பின் பாவத்திற்காய் வாழ்க்கையின் காலம் முழுதும் இருப்பைத் தொலைத்து துன்பம் போக்க அங்குமிங்கும் ஓடி வாழ்வைப் பறிகொடுத்துவிட்டு அந்தரத்தில் இருப்பவர்களே - என் மக்களே ! இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் போல் உம்முடன் ஒட்டியிருக்கும் கஷ்டங்களைப் போக்க உம்மை பாவங்களில் இருந்து மீட்க இந்த உலகை இரட்சிக்க எல்லாம் வல்ல பரம்பொருளாய் எமக்கான வழிகாட்டியாய் இருக்கும் அவன் - மீண்டும் பூமிக்கு வரப்போகிறான் . உன்னையும் என்னையும் படைத்தவன் அவன் உலகின் எல்லா அதிசயத்தையும் அமைத்தவன் அவன் நீர் , நிலம் , நெருப்பு , காற்று , ஆகாயம் என எல்லாம் தந்தவன் அவன் அவன் வரும் நாளில் உங்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்கும் அல்லல் விலக