Posts

Showing posts from October, 2012

அந்தரத்தில் இருப்பவர்கள்.

29-10-2012 ல் பாடிப்பறைக் கவியரங்கத்தில் வாசித்த கவிதை. சமர்ப்பணம்   மதத்தின் பெயரால் கொல்லப்பட்ட புத்தனுக்கும் இயேசுவுக்கும் சமர்பணம். *** " உடல்முழுதும் வியர்வையெனக் குருதி வழிய     தினம் தினம் அல்லலுற்று , அவதிப்பட்டு கணப்பொழுதும் நிம்மதியின்றி   அலைபவர்களே ! முந்தைப் பிறப்பின் பாவத்திற்காய்   வாழ்க்கையின் காலம் முழுதும்   இருப்பைத் தொலைத்து     துன்பம் போக்க அங்குமிங்கும் ஓடி   வாழ்வைப் பறிகொடுத்துவிட்டு     அந்தரத்தில் இருப்பவர்களே - என் மக்களே ! இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் போல்   உம்முடன் ஒட்டியிருக்கும் கஷ்டங்களைப் போக்க   உம்மை பாவங்களில் இருந்து மீட்க   இந்த உலகை இரட்சிக்க   எல்லாம் வல்ல பரம்பொருளாய்   எமக்கான வழிகாட்டியாய் இருக்கும் அவன் - மீண்டும்     பூமிக்கு வரப்போகிறான் . உன்னையும் என்னையும் படைத்தவன் அவன்   உலகின் எல்லா அதிசயத்தையும் அமைத்தவன் அவன்     நீர் , நிலம் , நெருப்பு , காற்று , ஆகாயம் என     எல்லாம் தந்தவன் அவன் அவன் வரும் நாளில்   உங்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்கும்   அல்லல் விலக