புத்தகங்களின் எதிரிகள்
இந்த உலகு புத்தகங்களின் எதிரிகளுக்குச் சொந்தமானது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இது பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்டநாள் இருந்தது. இன்று எப்படியும் எழுதியாக வேண்டும் என்று அமர்ந்தே விட்டேன். இந்தப் பதிவை எழுதுவதற்கு இன்றைய நாளைவிட பொருத்தமான நாள் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. யாழ் நூலகம் தீயிடப்பட்ட கருப்பு தினம். அதனாற்தான் இன்று இதை எழுதியே தீர்வது என்கிற முடிவுடன் எழுதுகிறேன். காலம் தோறும் புத்தகத்தின் எதிரிகள்தான் உலகை ஆண்டிருக்கிறார்கள். அது பற்றிப் பார்க்கும் முன்னர் எனது பார்வையில் புத்தகம் என்றால் என்ன என்பதைச் சொல்லவேண்டி இருக்கிறது. புத்தகம் ஆத்மார்த்தமானது, அது ஒரு அனுபவம் என்கிற அழகியல்வாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் வெளியே நின்று புத்தகங்களை நோக்குபவன் நான் (அதற்காக புத்தகம் குறித்த அழகியல் வாதக் கருத்துக்களை முற்றாக மறுப்பவன் அல்லன். புத்தகம் ஒரு அனுபவமும் தான்). என்னைப் பொறுத்தவரை புத்தகம் என்பது ஒரு கருவி. ஒரு ஆயுதம். வாய்மொழிக் கதைகளுக்கு அடுத்ததாக மனிதனிடம் இருக்கும் சிறந்த தொடர்பாடல் ஊடகம் அது. புத்தகம் என்பது உலகின் ஒட்டுமொத்த அறிவும் சேமி