குழந்தை வரைய ஒரு நதி


குழந்தை ஒன்றின்
தூரிகையிலிருந்து பிறக்கிறது
ஒரு நதி.

கடதாசிக்கு வெளியே
நதி நீர் தெறிக்க
வளைந்து செல்கிறது.
கசங்கி இருந்த
கடதாசி என்பதால்
மேட்டு நிலம்போல் அது கிடக்க
ஒவ்வொரு மேட்டையும்
மேவிக் பாய்கிறது நதி.

நதியினுள்ளே மீனும்
நதிமேலே பூவும்
கரை நெடுக
நுரை முத்தம்
வளைந்து செல்கிறது நதி.

காடு கடந்து
வயல் கடந்து
கடதாசியின் கரையைத் தொட்டு
அருவியாகிறது.
அகலமாய் நிளமாய்
குழந்தைகள் கொண்டாட
ஒவ்வொரு அடுக்கையும்
ஒன்றிற்கு கொடுத்திருக்கும்
குழந்தை வரைந்த நதி.

ஒற்றையைத் திருப்பி
பிற்குறிப்பை சேர்த்து
கோப்பிடுகிறது குழந்தை,
தொலைந்து போன
என் நதியைக் கண்டால்
கூட்டி வாருங்கள் என்னிடத்தில்.

Comments

Popular posts from this blog

மெய் நீ

நீந்தத் தெரியாத கனவுகள்

மலையின் பெயர் என்ன?